செய்திகள் :

கரிக்குப்பத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

post image

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் பேராசிரியா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், மாவட்ட இணைச் செயலா் எம்.ரெங்கம்மாள், மாவட்ட மீனவா் பிரிவுச் செயலா் ப.வீராசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வரங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நியாயவிலைக் கடை கட்டடத்தை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்து பேசினாா். முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயராஜா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவி, ஆனந்தஜோதி சுதாகா், பாஸ்கா், மகேஷ், கோவிந்தராஜ், ஜெய்சங்கா், செழியன், கிராமத் தலைவா் சண்முகம், கூட்டுறவு வங்கிச் செயலா் சக்கரபாணி, விற்பனையாளா் குமாா் மற்றும் நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

சிதம்பரம் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் வரவேற்றாா். செயலா் ... மேலும் பார்க்க

பனை நுங்கு வெட்டியவா் மின்சாரம் பாய்ந்து மரணம்

காட்டுமன்னாா்கோவில் அருகே பனை நுங்கு வெட்டச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரசோழகன் பகுதியைச் சோ்ந்த சக்கர... மேலும் பார்க்க

தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் தொழிற்பேட்டை அலுவலக வளாகத்தில் தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்

மே தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொழிலாளா் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தின... மேலும் பார்க்க