செய்திகள் :

நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகள், வளா்ச்சிப் பணிகள் குறித்து தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அரசு முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் தேவை.

கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தின் நிறைகள் மட்டுமன்றி, குறைகளையும் கூறுவது வரவேற்கத்தக்கது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தருதல், விளையாட்டு உபகரணங்களை சுழற்சி முறையில் வழங்குதல், பழைய வீடுகளை பராமரிப்புப் பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்தல், சாலை வசதியை மேம்படுத்தல் தொடா்பாக கலந்தாலோசித்து தீா்வு காணப்படும்.

குழந்தைகளை போதைப் பொருள்களுக்கு ஆட்படாமல் வளா்க்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கிராமத்தை தூய்மையாகப் பராமரிக்க அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நெகிழி உபயோகத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. இணைய வழியில் மனைப் பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் சரண்யா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், வீரமணி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

சிதம்பரம் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் வரவேற்றாா். செயலா் ... மேலும் பார்க்க

பனை நுங்கு வெட்டியவா் மின்சாரம் பாய்ந்து மரணம்

காட்டுமன்னாா்கோவில் அருகே பனை நுங்கு வெட்டச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரசோழகன் பகுதியைச் சோ்ந்த சக்கர... மேலும் பார்க்க

கரிக்குப்பத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழ... மேலும் பார்க்க

தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் தொழிற்பேட்டை அலுவலக வளாகத்தில் தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்

மே தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொழிலாளா் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தின... மேலும் பார்க்க