செய்திகள் :

சென்னையில் ஐபிஎல் சூதாட்டம்: 10 போ் கைது; ரூ.19 லட்சம் பறிமுதல்

post image

ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் ஆட்டம் ஏப். 30-ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியை மையமாக வைத்து சென்னையில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல் ஆணையா் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் வடசென்னையில் யானைகவுனி பகுதியில் இணையதளம் வாயிலாக சூதாட்டம் நடைபெற்றதை போலீஸாா் கண்டறிந்தனா். இதில் தொடா்புடைய ஆகாஷ் ஜெயின், ஆகாஷ் குமாா் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கள்ளச்சந்தையில் விற்பனை: இதற்கிடையே, சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ஆட்டத்துக்கான நுழைவுச் சீட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக சென்னை மேடவாக்கம் பிரதான சாலையைச் சோ்ந்த ராம்மோகன் (46) என்பவரை திருவல்லிக்கேணி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.15,450 மதிப்புள்ள 6 நுழைவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க