செய்திகள் :

மணிப்பூர்: 4 கிளர்ச்சியாளர்கள் கைது! நவீன வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்!

post image

மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 4 கிளர்ச்சியாளர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தின் நாவோரெம் பிராஹரி கல்லூரிக்கு அருகில் சமீபத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 கிளர்ச்சியாளர்களை நேற்று (ஏப்.21) பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதன் குண்டுகள், 6 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், அம்மாவட்டத்தின் சவோம்பங் பகுதியில் தடைசெய்யப்பட்ட ப்ரெபாக் எனும் அமைப்பைச் சேர்ந்த குந்த்ராக்பம் காதோ சிங் (வயது 22) எனும் கிளர்ச்சியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஏப்.21) கிழக்கு இம்பாலின் கெய்ரோ வாங்கெம் கிராமத்தின் அருகில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் பல்வேறு விதமான துப்பாக்கிகள், அதன் குண்டுகள், ஒரு வயர்லெஸ் செட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, தெங்னௌபால் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்.19) அன்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 22 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள், 7 செல்போன்கள் மற்றும் உருமறைப்பு ஆடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!

செல்போன் பறிமுதல் செய்த ஆசிரியரைத் தாக்கிய மாணவி!

ஆந்திரத்தில் செல்போனைப் பறிமுதல் செய்த பெண் ஆசிரியரை மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விசாகப்பட்டிண மாவட்டத்தில் பீமுனிப்பட்டிணம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல... மேலும் பார்க்க

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா!

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று (ஏப்.21) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுக... மேலும் பார்க்க

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியா... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறி... மேலும் பார்க்க

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மரியாதை செலுத்தினார். தொழில் சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ர... மேலும் பார்க்க