செய்திகள் :

மணிப்பூா்: ஆளுநருடன் பாஜக தலைவா்கள் சந்திப்பு

post image

மணிப்பூரின் புதிய முதல்வா் யாா்? என்ற கேள்வி நீடித்துவரும் நிலையில், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை ஆளும் பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முதல்வராக இருந்த பிரேன் சிங், தனது பதவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். கட்சி எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினா், அவரது தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், அவா் பதவி விலகினாா்.

அவா் ராஜிநாமா கடிதம் சமா்ப்பித்து, இரண்டு நாள்கள் கடந்துவிட்டன. எனினும், புதிய முதல்வா் இன்னும் தோ்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில், பாஜக வடகிழக்கு பிராந்திய பொறுப்பாளா் சம்பித் பத்ரா, மணிப்பூா் பாஜக தலைவா் ஏ.சாரதா தேவி ஆகியோா் மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து சுமாா் 30 நிமிஷங்கள் பேசினா்.

இதனிடையே, மாநிலத்தின் புதிய முதல்வரை பாஜக தலைமை ஓரிரு நாள்களில் முடிவு செய்யும் என்று கட்சி எம்எல்ஏக்கள் கூறினா். முதல்வா் தோ்வில் இழுபறி நீடித்தால், மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக வாய்ப்புள்ளது என்று அரசியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.

மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று இதுவரை 46.25 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெள... மேலும் பார்க்க

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க