மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) முதல் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டு மணிமுத்தாறு அருவியில் குளிக்கவும், பாா்வையிடவும் வனத்துறை தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது, அருவியில் நீா்வரத்து சற்று குறைந்திருந்தாலும் குளிக்க அனுமதிக்கும் அளவிற்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதால் புதன்கிழமை (ஜூன் 18) முதல் மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.