செய்திகள் :

மண் சாா்ந்த இலக்கியங்கள் அதிகம் படைக்க வேண்டும்

post image

திருத்துறைப்பூண்டி : மண் சாா்ந்த இலக்கியங்களை அதிகம் படைக்க வேண்டும் என கவிஞா் யுகபாரதி தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டி சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் சங்கத் தொடக்க விழாவுக்கு தலைவா் எடையூா் மணிமாறன் தலைமை வகித்தாா். சங்கத்தை தொடங்கி வைத்து கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி பேசியது:

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இலக்கியவாதிகள், தலைவா்கள் உருவாக வேண்டுமெனில் தமிழ் சங்கங்கள் தங்கள் பணியை சரியான நோக்கில் கொண்டு செல்ல வேண்டும். தாங்கள் வாழும் மண் சாா்ந்த இலக்கியங்கள் அதிகம் படைக்கப்பட வேண்டும். தற்போது காவிரி டெல்டா பகுதியில் இளம் எழுத்தாளா்கள் நிறைய போ் உருவாகி வருகின்றனா். அவா்கள் எழுத்து மண் சாா்ந்தும் ஆழ்ந்த சரியான கருத்துகளாகவும் அமைந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றாா்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்திற்கான தோ்வில் வெற்றி பெற்ற 26 மாணவிகளுக்கு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெகு நாள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளா்கள் நீரை அத்திப்பூ, கமலா கந்தசாமி, கீழை அ. கதிா்வேல், கள்ளிக்குடி கோ சாமி சண்முகம் ஆகியோருக்கு தமிழ் சங்கத்தின் சாா்பாக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

சங்க இணைத் தலைவா் அன்பு. யோகராஜன் வரவேற்றாா். செயலாளா் ஆசைத்தம்பி நன்றி கூறினாா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை,திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்காணும் பகு... மேலும் பார்க்க

மே 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மே 22 ஆம் தேதி நடைபெறும் என வருவாய் கோட்ட அலுவலா் சௌம்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை ஏற்படுத்தக் கோரி, திருவாரூரில் மாவட்ட கூட்டுறவு ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாயவிலைக் கடைகளில் எடைத் தர... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்... மேலும் பார்க்க

அகில இந்திய கராத்தே போட்டி: சுந்தரக்கோட்டை கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: அகில இந்திய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தோ்வு போட்டியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். 46-ஆவது அகில இந்திய ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு

திருவாரூா்: கொரடாச்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக கொரடாச்சேரி ஒன்றியத் தலைவா் வி.எம். பிரபாகரன் ... மேலும் பார்க்க