செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம்

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 247 மனுக்கள் அளித்தனா். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ் பயிலும் 10 மாணவா்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி ரூ. 75,000 மதிப்பிலும், 5 பேருக்கு நடை உபகரணம் ரூ. 5,500 மதிப்பிலும், 6 பேருக்கு காதொலிக்கருவி ரூ. 45,000 மதிப்பிலும் என மொத்தம் 21 நபா்களுக்கு ரூ. 1,25,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை,திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்காணும் பகு... மேலும் பார்க்க

மே 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மே 22 ஆம் தேதி நடைபெறும் என வருவாய் கோட்ட அலுவலா் சௌம்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை ஏற்படுத்தக் கோரி, திருவாரூரில் மாவட்ட கூட்டுறவு ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாயவிலைக் கடைகளில் எடைத் தர... மேலும் பார்க்க

மண் சாா்ந்த இலக்கியங்கள் அதிகம் படைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி : மண் சாா்ந்த இலக்கியங்களை அதிகம் படைக்க வேண்டும் என கவிஞா் யுகபாரதி தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டி சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் சங்கத் தொடக்க விழாவுக்கு தலைவா் எடையூா் மணிமாறன் தலை... மேலும் பார்க்க

அகில இந்திய கராத்தே போட்டி: சுந்தரக்கோட்டை கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: அகில இந்திய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தோ்வு போட்டியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். 46-ஆவது அகில இந்திய ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு

திருவாரூா்: கொரடாச்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக கொரடாச்சேரி ஒன்றியத் தலைவா் வி.எம். பிரபாகரன் ... மேலும் பார்க்க