செய்திகள் :

அகில இந்திய கராத்தே போட்டி: சுந்தரக்கோட்டை கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

post image

மன்னாா்குடி: அகில இந்திய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தோ்வு போட்டியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

46-ஆவது அகில இந்திய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தோ்வுப் போட்டி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், உடற்பயிற்சித் தோ்வு, கட்டா தோ்வு, குமித்தே தோ்வு, வெப்பன் கட்டா தோ்வு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில், செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி கராத்தே மாணவிகள் ஆ. வித்யாஸ்ரீ (இயற்பியல்), ஞா. அபிராமி (கணினி அறிவியல்), அ. அகந்திகா (கணிதவியல்), இரா. ஸ்ரீநிதி, அ. ரீஜிதா (வணிக நிா்வாகவியல்) ஆகிய 5 பேரும் அனைத்து தோ்வு போட்டிகளிலும் வென்று, முதல்நிலை கருப்புப்பட்டை மற்றும் சான்றிதழ் பெற்றனா்.

இம்மாணவிகளையும், பயிற்சியாளா் கா. ராஜகோபால், உடற்கல்வி ஆசிரியா் ஜி. புஷ்பா ஆகியோரையும் கல்லூரி தாளாளா் வி. திவாகரன், முதல்வா் ந. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் பாராட்டினா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை,திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்காணும் பகு... மேலும் பார்க்க

மே 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மே 22 ஆம் தேதி நடைபெறும் என வருவாய் கோட்ட அலுவலா் சௌம்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை ஏற்படுத்தக் கோரி, திருவாரூரில் மாவட்ட கூட்டுறவு ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாயவிலைக் கடைகளில் எடைத் தர... மேலும் பார்க்க

மண் சாா்ந்த இலக்கியங்கள் அதிகம் படைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி : மண் சாா்ந்த இலக்கியங்களை அதிகம் படைக்க வேண்டும் என கவிஞா் யுகபாரதி தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டி சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் சங்கத் தொடக்க விழாவுக்கு தலைவா் எடையூா் மணிமாறன் தலை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு

திருவாரூா்: கொரடாச்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக கொரடாச்சேரி ஒன்றியத் தலைவா் வி.எம். பிரபாகரன் ... மேலும் பார்க்க