செய்திகள் :

மதச்சார்பின்மை, சோசலிசத்தை தவிர்க்க பாஜக முயற்சி: கார்கே குற்றச்சாட்டு

post image

பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தை தவிர்க்க முயல்வதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

சம்விதான் பச்சாவ் சமவேஷ் நிகழ்ச்சியில் உரையாற்றிய கார்கே,

பாஜக ஆட்சியின் கீழ் பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், இளைஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. “அரசியலமைப்பை மாற்றுவதே பாஜகவின் நோக்கம். நமது அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை, சோசலிசத்தை தவிர்க்க பாஜக முயற்சிக்கிறது.

ஏழைகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாப்ப காங்கிரஸ் 2006இல் வன உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சட்டத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. தொழில்துறை என்ற பெயரில், பாஜக அரசு அனைத்து இடங்களிலும் காடுகளை அழித்து வருகிறது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவில்லை என்றால் அவர்களை அழித்துவிடுவார்கள். ஒடிசாவில் பாஜக ஆதரவாளர்கள் தலித்துகள் மற்றும் அரசு அதிகாரிகளைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் ஒடிசாவின் கஞ்சத்தில் இரண்டு தலித் ஆண்கள் மொட்டையடிக்கப்பட்டனர், முழங்காலிட்டு நடக்க வைத்தனர். புல் சாப்பிடவும், மாசு படிந்த நீரைக் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

காங்கிரஸ் அரசு இந்தியாவில் 160 பொதுத்துறை நிறுவனங்களை அமைத்ததாகவும், பாஜக ஆட்சியில் 23 நிறுவனங்களைத் தனியார் மயமாக்கியுள்ளது. காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை மோடி தனது நண்பர்களுக்கு விற்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, ​​அரசியலமைப்பை மாற்றுவதற்காக 400க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வாக்காளர்களை அவர் வலியுறுத்தினார், பெரிய அளவில் உரிமை கோரும் பாஜக, ஒடிசா, புவனேஸ்வருக்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. பாஜக மாநிலத்திற்கு எதுவும் செய்யாமல் பெருமை பெற விரும்புகிறார்கள். ஆனால், நாங்கள் ஒடிசா மக்களுடன் நிற்கிறோம் என்று அவர் கூறினார்.

Congress president Mallikarjun Kharge on Friday alleged that the BJP-led central government was attempting to omit secularism and socialism from the Constitution.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க