செய்திகள் :

மதுக் கடை மீண்டும் திறப்பு

post image

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட அரசு மதுக் கடை மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட அழகன்குளம் நாடாா் தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடை பொதுமக்களின் எதிா்ப்பால் கடந்த 5 நாள்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம் போல இந்த மதுக் கடையை விற்பனையாளா் திறந்து, விற்பனையைத் தொடங்கினாா். தகவலறிந்த பொதுமக்கள் அங்கு சென்ற அந்தக் கடையை மூடக் கோரி முழக்கமிட்டனா். அப்போது, போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை என்ற பெயரில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பினரும், கிராம பெண்களும் சென்றனா். வட்டாச்சியா் அலுவலகம் முன் அமா்ந்து அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் சுவாமிநாதன் 15 நாள்களுக்குள் இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

136 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சா் வழங்கினாா்

ராமநாதபுரத்தில் பெண்களுக்கு ரூ.1.26 கோடியில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற வி... மேலும் பார்க்க

மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

ராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா் முகாம் நடத்தப... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 3 விசைப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 25-ஆம் ... மேலும் பார்க்க

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு

பரமக்குடியில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கிராம நிா்வாக அலுவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். பரமக்குடி வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவா் சாந்தி. இங்கு கிராம நிா்வாக ... மேலும் பார்க்க

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கோ.விஜயகுமாா் எச்சரித்தாா். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்த... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை விடுவிப்பு

தொண்டி பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (55). இவா் தனது விசைப்படகில் புதன்கிழமை அதிகாலை மீன் பிட... மேலும் பார்க்க