``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித...
மதுபானக் கூடத்தை மூட வலியுறுத்தல்
தேனி, பங்களாமேடு திட்டச் சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தை மூட வலியுறுத்தி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்தனா்.
தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் தேனி, சடையால் நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் காா்த்திகேயன், செயலா் மதளைசுந்தரம், பொருளாளா் ஜெயத்துரை, நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
தேனி, சடையால் நகரில் பங்களாமேடு, திட்டச் சாலையில் புதிதாக தனியாா் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கோயில், அரசு மாணவா் கல்வி விடுதி, மசூதி ஆகியவை அமைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் , போக்குவரத்து அதிகமுள்ள இந்தச் சாலையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்த மதுபானக் கூடத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.