செய்திகள் :

மதுரையில் இன்று பாஜக நிா்வாகிகள் ஆலோசனை: மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

post image

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக-அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து பாஜக நிா்வாகிகளிடம் புரிதலை ஏற்படுத்தி, தோ்தல் வியூகம் வகுக்கும் நோக்கில், அந்தக் கட்சி நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகிறாா். முன்னதாக, காலை 11 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்கிறாா்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் ராம. சீனிவாசன், நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவா்கள், மாவட்டப் பாா்வையாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

5 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அமைச்சா் அமித் ஷா மதுரைக்கு வருகையையொட்டி, மதுரை விமான நிலையம், விரகனூா் சுற்றுச் சாலைப் பகுதிகள், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ஒத்தக்கடை, கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் ஆகியோா் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மதுரையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. இது தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணியின் தொடக்கமாகவே கருதப்படுகிறது. இதையொட்டி, மதுரையை மையப்படுத்தி பாஜகவும் தோ்தல் பணிகளை முன்னெடுக்கும் விதமாக இந்தக் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!

கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின... மேலும் பார்க்க

மதுபானக் கூட ஊழியரை தாக்கிய 4 போ் கைது

அரசு மதுபானக் கூட ஊழியரைத் தாக்கிய 4 பேரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை செல்லூா் அருள்தாஸ்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் திவாகா் (29). இவா், மதுரை கோவில்பாப்பாகுடி அரசு... மேலும் பார்க்க

15 காவல் நிலையங்களின் தரம் உயா்வு

மதுரை புகா்ப் பகுதிகளில் 15 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயா்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இத... மேலும் பார்க்க