செய்திகள் :

மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் பெற்ற பக்தர்கள்!

post image

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

குரு பூர்ணிமா சிறப்பு பூஜை
குரு பூர்ணிமா சிறப்பு பூஜை

ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. இதனை, 'குரு பூர்ணிமா' எனச் சாஸ்திரங்கள் சிறப்பித்துப் போற்றுகின்றன.

குரு வழிபாட்டுக்கு உகந்த நன்னாள் இது. மகத்துவமான குரு பூர்ணிமா தினத்தை ஒட்டி, மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில், சிறப்புப் புஷ்பாஞ்சலி மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் விக்ரகத்துடன் அவர் பயன்படுத்திய பாதுகைகள் இங்கு உள்ளன.

சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள், மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகை மற்றும் இதர தெய்வங்களுக்குப் புஷ்பாஞ்சலி செய்தனர்.

மகா பெரியவர் விக்ரகம்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

உடனடியாக திருமணம் நடக்கவும்; திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்; கல்யாண பிராப்த பூஜை

உடனடியாக திருமணம் நடக்கவும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்! கல்யாண பிராப்த பூஜை! இங்கு கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் நடைபெறும் கல்யாண ... மேலும் பார்க்க

சிவகங்கை: 2000 போலீஸார் பாதுகாப்பு; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருத்தேரோட்ட ஏற்பாடு!

நாளை காலை நடைபெறவுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.இதில் 25 ஆயிரத்திற்கும்... மேலும் பார்க்க

பர்கூர் மலை கிராமத்தில் மகா குண்டம் திருவிழா... கடலென திரண்ட மக்கள் - Album

குண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் ... மேலும் பார்க்க

Guru Mithreshiva: "ஆன்மீகத்தில் 35 ஆண்டுகள்... பல குருமார்களோட பயணித்திருக்கிறேன்" - குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவா எழுதிய பணவாசம், கருவில் இருந்து குரு வரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, சென்னையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாதார நிபுண... மேலும் பார்க்க