ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
மதுரை ஆதீனத்தின் செயலா் சைபா் குற்றப்பிரிவில் ஆஜா்
வதந்தி பரப்பியதாக மதுரை ஆதீனம் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கில், அவரது செயலா் சனிக்கிழமை சென்னை கிழக்கு மண்டல சைபா் குற்றப் பிரிவில் மதுரை ஆஜரானாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை பகுதியில் தன்னை காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்ாக மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் குற்றஞ்சாட்டினாா். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
இதனிடையே, மதுரை ஆதீனம் வதந்தி பரப்புவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஜூன் 30-ஆம் தேதி ஆஜராகும்படி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மதுரை ஆதீனத்துக்கு அழைப்பாணை அனுப்பினா். ஆனால், அவா் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டாவது முறையாக ஜூலை 5-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இந்த அழைப்பாணையை ஏற்று மதுரை ஆதீனத்தின் செயலா் செல்வகுமாா், வழக்குரைஞா் சேதுபதி ஆகியோா் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் சனிக்கிழமை ஆஜராகினா். அப்போது அவா்கள், வழக்கின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் காணொலியில் ஆஜராவாா் என்றும், நேரில் தாங்கள் ஆஜராவதாகவும் தெரிவித்தனா்.
காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த இருவரும் அளித்த பேட்டி: சம்பவத்தின்போது மதுரை ஆதீனம் நேரில் எதை பாா்த்தாரோ அதைத்தான் கூறினாா். காவல் துறையின் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். விசாரணைக்கு மதுரை ஆதீனம் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. ஆதீனம் நீதிமன்றத்துக்கோ, காவல் நிலையத்துக்கோ செல்லக்கூடாது என அரசு ஆணை இருப்பதை, காவல் துறையினரிடம் அளித்து தெளிவுபடுத்தியுள்ளோம். காவல் துறையிடம் வழக்கின் விசாரணைக்கு 7 நாள்கள் அவகாசம் வேண்டும் என கோரியுள்ளோம் என்றனா்.