செய்திகள் :

மதுரை: கணவரை இழந்த பெண்; காதலித்து மணந்து கொண்ட இளைஞரை கொடூரமாக கார் ஏற்றி கொன்ற உறவினர்கள்

post image

கணவரை இழந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொலை
கொலை

கணவரை இழந்த பெண்ணுடன் காதல்

மேலூர் அருகே பூதமங்கலம் பொட்டப்பட்டியை சேர்ந்த 21 வயது சதீஷ்குமார் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது தும்பப்பட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த ராகவி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ராகவியின் பெற்றோர், வீட்டிலிருந்த நகைகளை ராகவி திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்துள்ளார். இதனால், பிரச்னை வேண்டாமென்று ராகவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார் சதீஷகுமார்.

`என்னை கொன்று விடுவார்கள்’

உறவினர்களின் தொடர் கண்காணிப்பில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட ராகவி, ஒரு சந்தர்ப்பத்தில் 'என்னை கொன்று விடுவார்கள், வந்து மீட்டுச்செல்' என்று மொபைல் மூலம் சதீஸ்குமாருக்கு தெரிவித்திருக்கிறார். அதோடு கடந்த 16 ஆம் தேதி ஊருக்கு வந்த சதீஸ்குமார் ராகவியை அவர் வீட்டிலிருந்து மீட்டு, கொட்டாம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று தங்களை சேர்த்து வைக்கும்படி கேட்டுள்ளனர்.

அதோடு ராகவியின் சகோதரர் ராகுல் உட்பட உறவினர்களை அழைத்து இரவு 12 மணிவரை பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், மறுநாள் விசாரணைக்கு வருமாறு இருதரப்பிடமும் சொல்லி அனுப்பியுள்ளனர்.

MURDER

ராகவியுடன் சதீஸ்குமார் டூவீலரில் கிளம்பிச் சென்றபோது பின் தொடர்ந்து காரில் வந்த ராகவியின் சகோதரர் ராகுலும் உறவினர்களும், அய்யாபட்டி அருகே டூவீலர் மீது இடித்துள்ளனர். அதில் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழ, சதீஸ்குமாரை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். காயமைடந்து கிடந்த ராகவி, காவல்துறைக்கு போன் செய்தபின் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வந்து மீட்டுள்ளனர்.

சதீஸ்குமார் இறந்துவிட, ராகவி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரின் புகாரின்பேரில் சகோதரர் ராகுல் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர. இந்த சம்பவம் மேலூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை; பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: கணவனைக் கொன்று டிரமில் உப்பு போட்டு அடைத்து தப்பி ஓடிய பெண்; காதலனுடன் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா என்ற இடத்தில் வசிப்பவர் சுனிதா. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது கணவர் ஹன்ஸ்ராம் அங்குள்ள ச... மேலும் பார்க்க

செல்போனில் மூழ்கியதை கண்டித்த தாய்; 7 மாதக் குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வசித்து வருபவர்அப்துல்கலாம் ஆசாத். இவருக்கு சாரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பி.ஏ பட்டதாரியான மகள் ஷர்மி (வயது 26) என்... மேலும் பார்க்க

போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார்கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு தக்கலை பழைய பேரு... மேலும் பார்க்க