செய்திகள் :

மதுரை : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவர் தற்கொலை

post image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் 52 வயதான சின்னன். விவசாய கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலைகளுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மள்ளப்புரம் பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு வேலைக்கு சென்ற போது அங்கு தனியாக இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

போக்சோ
போக்சோ

இதனைக் கண்ட சிறுமியின் தாயார், சின்னனை சத்தம் போட்டு விரட்டி விட்டு உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சின்னன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தது.

தன் மீது புகார் அளித்துள்ளது குறித்து அறிந்த சின்னன், போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீஸார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்தது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.இவருக்கு3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.இதன் க... மேலும் பார்க்க

பீகார்: `எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?’ - 'போலி காவல் நிலையம்' நடத்தி வசூல் செய்த மோசடி கும்பல்

பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில் ஒரு மோசடி கும்பல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் போலி காவல் நிலையம் ஒன்றை நடத்திவந்தது தற்போது தெரியவந்துள்ளது. சமஸ்திப்பூர் என்ற பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏ... மேலும் பார்க்க

`ராக்கி கயிறு; சகோதரி’ - கணவன் கொலையில் பங்கு இருப்பதை ஒப்புக்கொண்ட சோனம்; சகோதரர் சொல்வதென்ன?

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சியும், சோனம் என்பவரும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த 10 நாட்கள் கழித்த நிலையில் இரண்டு பேரும் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றனர்... மேலும் பார்க்க