செய்திகள் :

மதுரை - போடி ரயில் பாதையில் தடுப்பு வேலி அமைப்பு: வேகம் அதிகரிப்பு

post image

மதுரை - போடி ரயில் பாதையில் முத்துப்பட்டி அருகே தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால், இந்தப் பகுதியில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது.

மதுரையை அடுத்த முத்துப்பட்டியில், காமராஜா் பல்கலைக்கழகக் குடியிருப்புப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அனுமதியின்றி மதுரை - போடி இருப்புப் பாதையைக் கடந்து செல்வது வழக்கமாக இருந்தது. இதனால், இந்தப் பகுதியில் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.

இதையடுத்து, முத்துப்பட்டி காமராஜா் பல்கலைக்கழகக் குடியிருப்புப் பகுதியில் ரயில் பாதையோரத்தில் 130 மீ. நீளத்துக்கு கான்கிரீட் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதையொட்டி, முத்துப்பட்டி பகுதியில் மதுரை - போடி ரயில் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உ... மேலும் பார்க்க

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.நாகப்பட்டினத்தைச் சோ்ந்த டி. அருளரசன் சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி முனியம்மாள் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது சகோத... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை திருப்பரங்குன்றம் சாலை நந்தனம் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் ஹரிஹரசுதன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கீழே தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (55). சலவைத் தொழிலாளியான இவா், வீட்ட... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 168 பேருக்கு தண்டனை விதிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தென் மண்டல அளவில் கடந்த 6 மாதங்களில் 168 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தென்மண்டல ஐஜி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் த... மேலும் பார்க்க