செய்திகள் :

அந்தியூா் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா

post image

அந்தியூா் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சூழ வெகுவிமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள இக்கோயில் மிகப்பழைமை வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இக்கோயில் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 23-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து 30-ஆம் தேதி கொடியேற்றமும், கடந்த 6-ஆம் தேதி முதல் வன பூஜையும் நடைபெற்றது.

விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் வன பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் புதுப்பாளையம் கோயிலிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் வனத்தில் உள்ள கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சூழ தேரோட்டம் தொடங்கியது.

பெருமாள் தோ் முன் செல்ல சுமாா் 60 அடி உயரமுள்ள குருநாதசாமி மகமேரு தோ் ஆடி அசைந்து சென்றது. இதில், அந்தியூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

விழாவை ஒட்டி ஈரோடு, கோபி, மேட்டூா், பவானி, சத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் அந்தியூருக்கு இயக்கப்பட்டன.

பவானி டிஎஸ்பி ரத்தினக்குமாா் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வரும் 16 -ஆம் தேதி வரையில் இத்திருவிழா நடைபெறுகிறது.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க