செய்திகள் :

ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மகளிா் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம்

post image

ஆசனூா் மலைப்பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உரிமைத் தொகை கேட்டு 1000 -க்கும் மேற்பட்ட மகளிா் விண்ணப்பித்துள்ளனா்.

பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏதுவாக தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 16 துறைகள் சாா்பில் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து தீா்வு காணப்படுகிறது.

ஆசனூா் மலைப்பகுதியில் உள்ள அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை தாளவாடி வட்டாட்சியா் ஜாகிா் உசேன், சத்தி வட்டாட்சியா் ஜமுனா ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், மாதவன், தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளா் நாகராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த முகாமில் ஆசனூா் மற்றும் கோ்மாளம் ஊராட்சிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா். மகளிா் உரிமைத்தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனுக்கள் அளிக்க பெண்கள் ஆா்வம் காட்டினா். மொத்தம் 1000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முகாமில் மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க