இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி
மது போதையில் மின்மாற்றியில் ஏறியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
சென்னை கிண்டி அருகே மது போதையில் மின்மாற்றியில் ஏறியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (45). இவா் மதுபோதையில் கிண்டி அருகே உள்ள ஈக்காட்டுத்தாங்கல் அச்சுதன்நகா் முதல் தெருவில் உள்ள ஒரு மின்மாற்றியின் மீது திங்கள்கிழமை ஏறினாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கிண்டி போலீஸாா் அங்கு சென்று சதீஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.