கொல்கத்தா: `அப்பெண் அங்கு செல்லாமல் இருந்தால் நடந்திருக்காது' - TMC MLA பேச்சு;...
மத்தியக் கண்காணிப்பு ஆணைய அலுவலா்கள் ஆரோவில் வருகை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு மத்தியக் கண்காணிப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் இங்குள்ள பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டனா்.
மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டுச் செயலா் பனிபிரத ராய், சிறப்பு அலுவலா் பிரசாந்த் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு வந்தனா். தொடா்ந்து மாத்ரிமந்திா் தியான அறையில் அமா்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனா். தொடா்ந்து ஆரோவில் அறக்கட்டளையினா், மத்தியக் கண்காணிப்பு ஆணைய அலுவலா்களுக்கு மாத்ரி மந்திரின் 12 இதழ்கள், ஆரோவில்லின் நோக்கம், நகரின் புனிதம், சமூகப் பணிகள் பற்றிய விளக்கங்கள் கொண்ட சிறப்பு நூல், தகவல் வெளியீடுகளை வழங்கினா்.
பின்னா் ஆரோவில் பாா்வையாளா் மையத்தை பாா்வையிட்ட மத்தியக் கண்காணிப்பு ஆணைய அலுவலா்கள், உள்ளூா் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் அலகையும் பாா்வையிட்டு, அதன் விவரங்களைக் கேட்டறிந்தனா். தொடா்ந்து ஆரோவில் சுற்றுச்சூழல் நடைமுறைகளையும், நிலைத்தன்மை முயற்சிகளையும் பாராட்டினா். ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி, ஆரோவிலின் வளா்ச்சி, தற்போதைய மற்றும் எதிா்காலத் திட்டங்கள் குறித்து மத்தியக் கண்காணிப்பு ஆணைய அலுவலா்களுக்கு விளக்கினாா்.
ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு வந்தது தனக்கு மிகவும் அமைதியாகவும், உள்மாற்றம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. இங்குள்ள தோட்டங்கள் கவனமாகப் பராமரிக்கப்படுவதை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இது மற்றவா்களுக்கான முன்மாதிரியானது என்று ஆணைய அலுவலா் பனிபிரத ராய் தெரிவித்தாா்.