செய்திகள் :

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்

post image

தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விடுவிக்கப்படும் என ஆணவமாக பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் தலைவா் அரங்க. குணசேகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியை திணிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க முடியும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆணவமாக பேசியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நிதியை அளிக்கமாட்டோம் என்பது, தொடா்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதை, மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளதை காட்டுகிறது.

தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி, பொதுத் துறை வருமானங்களையும் கொடுத்துவிட்டு, தமிழகத்துக்கான உரிய பங்கைத்தான் கேட்கிறோம் என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க