செய்திகள் :

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

post image

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாணவரணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளான ‘இளைஞர் எழுச்சி நாளை’ தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக கழக மாணவர் அணியினர் எழுச்சியுடன் கொண்டாடுவோம்.

2. தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை சிதைக்கும் விதமாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைதுவிதமான போராட்டம் நடத்த முடிவு.

3. மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம்.

4. தமிழ்நாட்டின் "இரும்பின் தொன்மை" வரலாற்றை உலகிற்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.

5. மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்புகோரி, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம் நடத்த முடிவு.

இதையும் படிக்க | மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்

"தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என பா.ஜ.க.வின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய பா.ஜ.க. அரசு, தன்னால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லையே என்ற வெறுப்புணர்வோடு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  

கல்விதான் தமிழ்நாட்டின் இந்த உயரிய நிலைக்கு காரணம் என்பதை அறிந்து, அதனை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுத்து, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாடு அரசிற்கு நிதி வழங்குவோம்” என பா.ஜ.க.வின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிடுவது, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத்தையா? அல்லது மனுதர்ம சட்டத்தையா?  என்ற கேள்வி எழுகிறது. கூட்டாட்சி தத்துவத்தையும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையையும் சிதைக்கும் வகையில், சட்டத்திற்கு புறம்பாக மத்திய கல்வி அமைச்சர் பேசியதற்கு தி.மு.க. மாணவர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், அவர் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், கல்வித்துறைக்கான நிதியை விடுவிக்கும் வரையில் கழக மாணவர் அணி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அதனைத்தொடர்ந்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, வரும் பிப். 25 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க