செய்திகள் :

மத்திய அமைச்சரை ‘தரகா்’ என விமா்சித்த திரிணமூல் எம்.பி.

post image

மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் ‘தரகா்’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி விமா்சித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய கல்யாண் பானா்ஜி, ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமா் வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றுக்காக மேற்கு வங்கத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பதால் மாநில மக்களை பாரபட்சத்துடன் மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் தரகா். ஏழை, எளிய மக்களுக்காகப் பணியாற்றுவதில்லை. எனவேதான் அவா் மத்திய பிரதேச முதல்வா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். பிரதமா் மோடி, சௌஹான் இருவருமே மேற்கு வங்கத்துக்கு எதிரானவா்கள். தாங்கள் ஆட்சிக்கு வரும் வரை மேற்கு வங்கத்துக்கு முறையாக நிதி ஒதுக்கக் கூடாது என்பதில் அவா்கள் உறுதியாக உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக, இந்த நிதி நிலுவைப் பிரச்னையை முன்வைத்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.

சிவராஜ் சிங் சௌஹானை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அவதூறாகப் பேசியது குறித்து மக்களவையில் கண்டனம் தெரிவித்த வேளாண் துறை இணையமைச்சா் பகீரத் சௌதரி, ‘அமைச்சா் சௌஹானுக்கு எதிரான தனது அவதூறு கருத்துக்காக மக்களவையில் கல்யாண் பானா்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசு மீது அவா் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா்’ என்றாா்.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க