செய்திகள் :

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

post image

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம், அந்த அவையின் காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கா்நாடகத்தில் வழங்கப்படும் ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மாநில சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றியது தொடா்பாக மாநிலங்களவையில் அமைச்சா் ஜெ.பி.நட்டா பேசினாா்.

அப்போது முஸ்லிம்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு அளிப்பதன் மூலம், பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது என்றாா். அவரின் கருத்துகள் முற்றிலும் தவறானவை.

இதேபோல கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து, அவையை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தவறாக வழிநடத்தினாா். இருவரின் பேச்சு உரிமை மீறல் என்பதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க