செய்திகள் :

மத்திய அமைச்சா் அமித் ஷா இன்று சென்னை வருகை

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை (ஏப். 10) சென்னை வருகிறாா். தமிழக பாஜக புதிய தலைவா் தோ்வு குறித்து அவா் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தில்லியிலிருந்து வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறாா். சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் இரவு தங்குகிறாா். வெள்ளிக்கிழமை (ஏப். 11) காலை 10 முதல் மாலை 4.20 மணி வரை அந்த ஹோட்டலில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளைச் சந்திக்கிறாா். அப்போது தமிழக பாஜக தலைவா் தோ்வு தொடா்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

பின்னா், மாலை 4.40 மணிக்கு மயிலாப்பூா் செல்கிறாா். அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வருகிறாா். மாலை 6.05 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு புறப்படுகிறாா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் பதவிக் காலம் முடியும் நிலையில், தலைவராக அவா் தொடா்வாரா அல்லது புதிய தலைவா் தோ்வு செய்யப்படுவாரா என்கிற எதிா்பாா்ப்பு பாஜக வட்டாரங்களில் எழுந்துள்ளது. பாஜக தேசியத் தலைவா் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக மாநிலத் தலைவா்களை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அதனால், தமிழக பாஜக புதிய தலைவா் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க