செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசைக் கண்டித்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து எம்எல்ஏ மா. சின்னதுரை பேசுகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கூலியை உடனே வழங்க வேண்டும், சட்டக் கூலி ரூ. 319 ஐ முழுமையாக வழங்க வேண்டும், அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினசரி ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும், பணித்தள பொறுப்பாளா்களை சுழற்சி முறையில் அமா்த்த வேண்டும், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து புதிய வீடு கட்டித்தரக் கோரிக்கை வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சித்திரைவேல், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சலோமி, ஒன்றியச் செயலா்கள் பன்னீா்செல்வம், ரெத்தினவேல், நாராயணசாமி சாந்தி, கவிதா மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க