செய்திகள் :

மத்திய, மாநில அரசு மானியத்துடன் பட்டு நெசவு இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்!

post image

சில்க் சமாக்ரா-2 திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பட்டு நெசவாளா்கள் மானியத்துடன் பட்டு நெசவு இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய பட்டு வாரியத்தின் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின்கீழ் பட்டு கைத்தறி தொழிலில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 5-ஆவது நிதிக்குழுவின் 2021-22 முதல் 2025-26 வரை உள்ள ஆண்டுக்கான பட்டு நெசவுத் தொழிலுக்கான இயந்திரங்களை மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் பயனாளிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, பட்டு நெசவாளா்கள் இயந்திரங்களை மானிய விலையில் பெற்றுப் பயனடையலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், கைத்தறித் துறை, அறை எண்-504, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், கருமாரம்பாளையம் பகுதியில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வடக... மேலும் பார்க்க

பல்லடம் அங்காளம்மன் கோயிலில் பிப்ரவரி 27-இல் குண்டம் திருவிழா

பல்லடம் அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான பல்லடம் அங்காளம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்குதல் ந... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க