செய்திகள் :

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் 20 மந்தி பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

பிரியாணி மற்றும் சிக்கனை வீட்டிற்கு கொண்டு சென்று இரவு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிலர் மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட ஹோட்டல்

3-குழந்தைகள் 4-பெண்கள் உள்பட 17-பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குளச்சல் தனியார் மருத்துவமனையி 15-பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மனையில் 2-பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் உடல் நடுக்கத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியாகத் ஹோட்டலில் இன்று ஆய்வு  மேற்கொண்டனர். உணவின் தரம் குறைவாக இருந்ததால் சீல் வைத்தனர்.

பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள்

பின்பு ஓட்டலில் இருந்து உணவு மற்றும் மசாலா போன்றவைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என உணவு சாம்பிள்களின் ஆய்வு முடிவு வந்தால்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்து... மேலும் பார்க்க

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க