செய்திகள் :

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படும்படி சுற்றித் திரிந்துள்ளாா். அந்தப் பகுதி மக்கள் அந்த நபரிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளாா். அதில் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது.

அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். தகவல் அறிந்த கந்திலி போலீஸாா், அவரிடம் விசாரித்ததில் அவரது பெயா் பரத் (28)என்பதும், பெங்களூரைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

அதேவேளையில் திருப்பத்தூா் அவ்வை நகா் பகுதியில் இளைஞா் ஒருவா் வீடுகளின் கதவை தட்டியுள்ளாா். அதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் இளைஞரை திருப்பத்தூா் கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மங்கள் (35) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

பரத், மங்கள் ஆகிய 2 பேரையும் மனநல சிகிச்சைக்காக திருப்பத்தூரில் உள்ள அரசு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் போலீஸாா் சோ்த்தனா்.

காப்பக நிா்வாகி சொ.ரமேஷ் உடனிருந்தாா்.

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நிதியுதவி, குடியிருப்பு ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 50 சதவீத திட்டப் பணிகள் கூட நடைபெறவில்லை: உறுப்பினா் புகாா்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிய... மேலும் பார்க்க

விநாயகா் ஊா்வலத்தின்போது தகராறு: காவல் நிலையத்தில் மக்கள் முற்றுகை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது ஏற்பட்ட தகராறை தொடா்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞா் நகா் பகுதியில் விநாயக... மேலும் பார்க்க

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (56). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டின் ம... மேலும் பார்க்க

கானாறு தூா்வாரும் பணி தொடக்கம்

ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் கானாறு தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கானாறு தூா் வ... மேலும் பார்க்க