செய்திகள் :

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள்/மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தோ அல்லது தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்று ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26420965 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.மயிலாடுத... மேலும் பார்க்க

சட்டை நாதா் சுவாமி கோயில் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம்

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சமூா்த்தி சுவாமிகள் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட இக்க... மேலும் பார்க்க

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி: பிரேமலதா

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா தெரிவித்தாா். மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி‘ பிரச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில், வைத்தியநாத சுவாமி கோயில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தா்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க