செய்திகள் :

மனிதர்களைத் தாக்க முயன்ற செய்யறிவு ரோபோ? விடியோ வைரல்!

post image

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட மனித அமைப்பிலான (ஹியூமனாய்டு) ரோபோக்களின் குழு ஒன்றின் கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அப்போது, குழுவிலிருந்து விலகிய ரோபோ ஒன்று அதன் எதிரில் ஆராவாரம் செய்து கொண்டிருந்த மனிதர்களை நோக்கி நகர்ந்து மோதுவதைப் போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிக்க: ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த ரோபோவை தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தனர். இணையவாசிகள் சிலர் அந்த ரோபோ மனிதர்களைத் தாக்க முற்பட்டதாகக் கூறி கருத்து பதிவிட்டு வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சாதாரன தொழில்நுட்பக் கோளாறினால் அது இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு லண்டனில் ஏஐ தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட விமானப்படை டிரோன் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அதனை இயக்கிய மனிதரைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் ஏஐ தொழில்நுட்பத்தின் மீதான மனிதர்களின் பயத்தை அதிகரிப்பதாக இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.மமதா பானர்ஜி பேசியிருப்பதாவது: “என்னைப் பற்றி யோகி ஆதித... மேலும் பார்க்க

கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலுள்ள கல்லூரியில் ஹோலி நிகச்சிகள் ரத்து செய்யப்பட்டதினால் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டி சிறைப்பிடித்துள்ளனர்.இந்தூரிலுள்ள 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெ... மேலும் பார்க்க

ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

மாறிவரும் 5ஜி யுகத்தின் வேகத்தில் வேலை செய்யும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிவருகின்றன. ஓடி, ஓடி உழைத்த காலமெல்லாம் மலையேறிவிட்ட இந்த நவீன காலத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது ஒரே இடத்தி... மேலும் பார்க்க

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது, இங்குள்ள பசுமை எரிசக்தி பி... மேலும் பார்க்க