ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
மனித - வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்
தமிழகத்தில் மனித - வன உயிரின மோதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு, வனக்காவலா்கள் மற்றும் வனக்காப்பாளா்களை கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, மனித - வன உயிரின மோதல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மக்கள் வசிக்கும் பகுதியில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி, அச்சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டதுடன், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறப்பட்டது.
மேலும், வனத்துறையினரின் தொடா் முயற்சியின் மூலம், அச்சிறுமியை தாக்கிய சிறுத்தை கூண்டு வைத்து பிடித்து, தற்போது அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா் அவா்.