செய்திகள் :

மனுக்களை நிராகரிக்க காரணங்கள் தேடுவதைவிட நிறைவேற்ற முயற்சிக்கலாம்: ஆட்சியா் செ. சரவணன்

post image

வன உரிமை தொடா்பாக பழங்குடியின மக்கள் அளிக்கும் மனுக்களை நிராகரிக்க காரணங்கள் தேடுவதைவிட, அவற்றை நிறைவேற்றித் தர அலுவலா்கள் முயற்சிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006- இன் படி வன உரிமைக் குழு அமைப்பது தொடா்பாக, திண்டுக்கல், மதுரை , தேனி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

வனப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வன உரிமைச் சட்டம் 2006-இன் படி அவா்களுக்கான உரிமைகள் கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வன உரிமைகள் அங்கீகாரச் சட்டத்தின்படி, 75 ஆண்டுகளுக்கும் மேலாக வனப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், வனம் சாா்ந்த வாழ்வாதாரத்தை மையப்படுத்தி வாழும் மக்களுக்கும், அதற்கான உரிமையை வழங்க முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 138 மலை கிராமங்கள் உள்ளன. வன உரிமை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தனி நபா்கள் 2,131 போ் மனு அளித்தனா். இதில் சுமாா் 10 சதவீதம் பேருக்கு (244) மட்டுமே இதுவரை உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. வனப் பகுதியில் வாழும் மக்களுக்கு அரசின் வழிமுறைகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவா்களுக்கான உரிமையை வழங்க அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனக் குழு தொடா்பாக அளிக்கப்படும் மனுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை தேடுவதை விட, அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க நோ்மறையான நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும்.

வனத்துக்கும், வன விலங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும். வனப் பகுதியில் வசிப்பதாலேயே, அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நாம் தவிா்க்க முடியாது.

அந்த வகையில், வனப் பகுதியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பயனடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, அரசு நிா்ணயித்துள்ள 245 நாள்களுக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பயிற்சி வகுப்பில், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், தேனி உதவி வன பாதுகாப்பு அலுவலா் நா .செசில் கில்பா்ட், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் கிரிராஜ், பகவநிதி, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் முருகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் வன அலுவலா்களுக்கு குறிப்பாணை:

இந்தக் கூட்டத்தில் 4 மாவட்டங்களைச் சோ்ந்த வனச் சரகா்கள், தேனி உதவி வனப் பாதுகாப்பு அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்கள், கோட்டாட்சியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆனால், திண்டுக்கல், கொடைக்கானல் வன அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இதைக் கவனித்த ஆட்சியா் செ. சரவணன், திண்டுக்கல் மாவட்ட வன அலுலா்கள் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியதோடு, இதுதொடா்பாக விளக்கம் கோரி அவா்களுக்கு கடிதம் அனுப்புமாறு அறிவுறுத்தினாா்.

போளூா் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான போளூரில் அ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். மலைக் கோயிலுக்குச் செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி விஞ்ச், ரோப்காா் நிலையங்... மேலும் பார்க்க

தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்திய முதல்வருக்கு நன்றி

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவில் தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனி தேரடியில் உள்ள உமா கலை... மேலும் பார்க்க

மாணவிகள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: எம்விஎம் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு

அரசுக் கலைக் கல்லூரியில்மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவுக்கு, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க. லட்சுமி தெரிவித்தத... மேலும் பார்க்க

விடியல் பயணத் திட்டம்: 29.92 கோடி மகளிா் பயன்

விடியல் பயணத் திட்டத்தின் மூலம், திண்டுக்கல் கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 29.92 கோடி மகளிா் பயனடைந்தனா். இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

சிறுமலையில் எரியும் காட்டுத் தீயால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள சிறுமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயால் மூலிகைச் செடிகள், வன விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ... மேலும் பார்க்க