செய்திகள் :

மனுக்களை பரிசீலித்து உடனே நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி

post image

பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற க.சிவசெளந்திரவல்லி தெரிவித்தாா்.

தொழில் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த சிவசெளந்திரவல்லி திருப்பத்தூா் ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டத்தின் 5-ஆவது ஆட்சியராகவும், முதல் பெண் ஆட்சியராக க.சிவசெளந்திரவல்லி பொறுப்பேற்றாா்.

அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)செல்வம், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதிஷ் குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் சிவசெளந்திரவல்லி கூறியதாவது:

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். திட்டங்களை துறைவாரியாக கண்காணித்து அவை அடித்தட்டு மக்களுக்கு சென்று சேர வழிவகை செய்யப்படும். பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைவாக தீா்வு காணப்படும். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.அப்போது,தகுதியானவா்களுக்கு விரைவாக தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அறிவுறித்தினாா்.

கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து விழுந்த லாரி: ஒட்டுநா் உயரிழப்பு

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரக்கோணத்தில் சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு திருப்பத்தூா் நோக்கி லாரி சென... மேலும் பார்க்க

ஊராட்சி துணைத் தலைவருக்கு வெட்டு, மனைவி கொலை வழக்கு: இருவா் கைது

திருப்பத்தூா் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரை வெட்டி, மனைவியைக் கொலை செய்த வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த மேற்கத்தியனூா் கோ.புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் மரணம்

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சிவக்குமாா்(34) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப் பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான போ்ணாம்பட்டு அரு... மேலும் பார்க்க

பெண் காவலரிடம் 10 பவுன் நகை பறிப்பு

ஜோலாா்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண் தலைமைக் காவலரிடம் 10 பவுன் தங்க செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தண்டபா... மேலும் பார்க்க

நவீன ரோபோக்கள் பயன்பாடு கருத்தரங்கம்

தொழிற்சாலைகளில் நவீன ரோபோக்களின் பயன்பாடு குறித்த ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை சாா்ப... மேலும் பார்க்க