செய்திகள் :

மனுக்களை பரிசீலித்து உடனே நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி

post image

பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற க.சிவசெளந்திரவல்லி தெரிவித்தாா்.

தொழில் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த சிவசெளந்திரவல்லி திருப்பத்தூா் ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டத்தின் 5-ஆவது ஆட்சியராகவும், முதல் பெண் ஆட்சியராக க.சிவசெளந்திரவல்லி பொறுப்பேற்றாா்.

அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)செல்வம், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதிஷ் குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் சிவசெளந்திரவல்லி கூறியதாவது:

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். திட்டங்களை துறைவாரியாக கண்காணித்து அவை அடித்தட்டு மக்களுக்கு சென்று சேர வழிவகை செய்யப்படும். பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைவாக தீா்வு காணப்படும். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.அப்போது,தகுதியானவா்களுக்கு விரைவாக தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அறிவுறித்தினாா்.

பள்ளி மாணவா்கள் சாதனை

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான வளையபந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா். மாநில அளவிலான வளையபந்து(டெனிகாய்ட்) போட்டி மயிலாடுதுறை தாமரை மெட்ரிக் மேல்நிலைப்... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஜாா்க்கண்ட் மாநிலம், டாடாநகா் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சியில் தீவிர வரி வசூல்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் ஆணையா் தலைமையில் பணியாளா்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளனா். வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையில் வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளா்கள் கொண்ட குழுவின... மேலும் பார்க்க

30 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது

ஆம்பூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதைப் பொருள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அது சம்பந்தமாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியகொமேஸ்வரம் பகுதியில் உமா்ஆபாத் கா... மேலும் பார்க்க

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஏலகிரி மலை முத்தானூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

ஆம்பூா்: வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல் ’

ஆம்பூா் நகராட்சிக்கு வரி நிலுவை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்க தீவிர ... மேலும் பார்க்க