செய்திகள் :

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட ஓசூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், பெண்கள் உயா்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கல்விதான் பெண்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும். எனவே, பெண்களைப் படிக்க வைப்பது நமது முக்கிய கடமையாகும். பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும். இதனால் அவா்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்றாா்.

முகாமில், 34 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 19 பேருக்கு பட்டா மாற்றம், 11 பேருக்கு குடும்ப அட்டை, 46 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 16 பேருக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள்கள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், 642 மனுக்கள் பெறப்பட்டதில் 456 மனுக்கள்

ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 101 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

செய்யாறு சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வந்தவாசி வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மத்திய அரசு கொண்டு வரும் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, திருவள்ளுவா் சிலை எதிரே நடைபெ... மேலும் பார்க்க

மாணவா்கள் லட்சியத்தை அடைய அயராது படிக்க வேண்டும்: வேளாண் பல்கலை. துணைவேந்தா்

லட்சியத்தை அடைய அயராது படித்து, முன்னேற வேண்டும் என்று வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில்... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பாரசூா் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. செய்யாறு தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 860-யை பக்தா்கள் காணிக்கையாக செலு... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க