உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி
மனைவிக்கு கத்தரிக்கோல் குத்து: அதிமுக நிா்வாகி மீது வழக்கு
தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அதிமுக நகரச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சின்னமனூா் பத்மசாமி கோவில் தெருவைச் சோ்ந்த அதிமுக நகரச் செயலா் பிச்சைக்கனி(41). இவரது மனைவி மகாலட்சுமி (38 ). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
பிச்சைக்கனிக்கு கம்பத்தைச் சோ்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவி மகாலட்சுமி தனது உறவினா்களுடன் கம்பம் கக்கன் தெருவிலுள்ள அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று தனது கணவரை தன்னுடன் வரும்படி அழைத்திருக்கிறாா்.
அப்போது, அந்தப் பெண்ணுக்கும் மகாலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பிச்சைக்கனி மனைவி மகலாட்சுமியை கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா்.
இதில் காயமடைந்த மகாலட்சுமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து பிச்சைக்கனி மீது கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.