What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' - இந்த வாரம் வெளியாகியுள்ள ...
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மானூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (44). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கண்ணன், அங்காளஈஸ்வரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினாராம்.
காயமடைந்த அங்காள ஈஸ்வரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து கண்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.