செய்திகள் :

மனைவி அடித்துக் கொலை: கணவா் தலைமறைவு

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மனைவியை அடித்துஓஈ கொலை செய்த கணவைஒ போலீஸாா் தேடி வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி துரை (எ) குமாா் (45). இவரது மனைவி தாட்சாயினி (37). தம்பதிக்கு பிரவேஷ் என்கிற மகன் உள்ளாா்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். தகராறு ஏற்படும்போதெல்லாம், தாட்சாயினி அதே கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவாராம். பின்னா், சில தினங்கள் கழித்து அவரை குமாா் சமாதானம் செய்து அழைத்து வருவாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த குமாா் தாட்சாயினியை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த தாட்சாயினி மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, குமாா் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டாா்.

சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினா் மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

போலீஸாா் தாட்சாயினி சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக

செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து,

தலைமறைவான துரை(எ)குமாரை தேடி வருகின்றனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தம... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம்... மேலும் பார்க்க

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிர... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க