செய்திகள் :

மனைவி கொலை வழக்கில் தலைமறைவானவா் 29 ஆண்டுகளுக்கு பின் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மனைவியை எரித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவானவா் 29 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் தாஸ் (59). இவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் மனைவி கொடுமைப்படுத்தி, தீ வைத்து கொலை செய்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து தாஸை கைது செய்தனா். 10 மாதங்கள் சிறையில் இருந்த அவா், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா் தலைமறைவானாா்.

இந்த நிலையில் அண்மையில் பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விசாரித்து முடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதனையடுத்து, தாஸ் வழக்கில் மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தாஸ் தங்கியிருப்பதும், அங்கு லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸாா் தாஸை கைது செய்தனா். பின்னா் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க