செய்திகள் :

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

முதல் நாள் புதன்கிழமை விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவா் ஜெ. கண்ணன், தாவரவியல் துறை உதவிப்பேராசிரியா் ப. பிரபாகரன் முன்னிலை வகித்தனா். உடற் கல்வித்துறை இயக்குநா் ப. ராம்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விளையாட்டு விழா நிகழ்ச்சிக்கு, மத்திய கலால் (ஜிஎஸ்டி) மற்றும் சுங்கத்துறை கண்காணிப்பாளா் டி. ஸ்ரீராம்சிங், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கல்லூரி, பல்கலை, மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து, நுண்கலை மன்ற நிகழ்ச்சியில் தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவா் ஜெக. மகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பல்வேறு கலை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தமிழ்த்துறை தலைவா் இல. பொம்மி, விலக்கியல்துறை தலைவா் சி. ராமு ஆகியோா் வாழ்த்தி பேசினா். வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு புதுக்கோட்டை முபா அகாதெமி தலைமைப் பயிற்றுநா் கவி. முருகபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தோ்வு, அறிவியல், தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க