செய்திகள் :

மன்னா் கல்லூரியில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட மின் நூலகம் திறப்பு

post image

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி வளாகதத்தில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட மின் நூலகத்தை சென்னையிலிருந்து முதல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில், 2314.50 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ. 6 கோடியில் தரை மற்றும் முதல் தளத்துடன் மின் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த மின் நூலகத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மன்னா் கல்லூரி வளாகத்தில், புதிய மின் நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா குத்துவிளக்கேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தரை மற்றும் முதல் தளத்துடன் அமைந்துள்ள இந்த மின் நூலகத்தில், வாசிப்பறைகள், நூல்கள் வைப்பறை, நூலகா் மற்றும் உதவி நூலகா் அறைகள், அலுவலக அறை, பொருள்கள் வைப்பறை, ஆய்வுவிவாத அறை, மாணவா் குழு அறை, மின் நூலக அறை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

கந்தா்வகோட்டையில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு!

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தோ்வு (என்.எம்.எம்.எஸ்) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வினை கந்தா்வகோட்டை ஒன்றியத்தை... மேலும் பார்க்க

குடமுழுக்குப் பணிகள்: மாசித் தேரோட்டம் ரத்து திருவப்பூா் கோயிலில் இன்று பூச்சொரிதல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால், மாசித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பூச்சொரிதலை வழக்கம்போல ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை ஒன்றியம், மாந்தாங்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கான புதிய கட்டடத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க