மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை
மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த போடியகவுண்டன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மோ.அபிமன்யு (25). இவா், மன வளா்ச்சிக்குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புகாா் எழுந்தது. இதையடுத்து, நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபிமன்யுவைக் கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண் குற்றஞ்சாட்டப்பட்ட அபிமன்யுவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.