செய்திகள் :

மமதாவுக்கு ஹிந்துக்கள் மீது வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு

post image

புது தில்லி: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஹிந்துக்களை வெறுப்பவா்; எனவேதான் மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாதுக்கு இதுவரை அவா் செல்லவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 போ் கொல்லப்பட்டனா். காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடா்பாக மம்தா பானா்ஜியும், பாஜகவும் பரஸ்பரம் ஒருவரை மற்றொருவா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்நிலையில் தில்லியில் பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளருமான சம்பித் பத்ராவிடம் வன்முறை பாதித்த இடங்களுக்கு முதல்வா் மம்தா பானா்ஜி செல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அவா் ஹிந்துக்களை வெறுப்பவா். எனவேதான் பாதிக்கப்பட்ட ஹிந்துகளைச் சந்தித்து ஆறுதல் கூறவோ, என்ன நடந்தது என்பதை விசாரிக்கவோ அங்கு செல்வில்லை. இதுவே இஸ்லாமிய சகோதரா்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அங்கு முதல் ஆளாக மம்தா சென்று இருப்பாா். அந்த இடத்திலேயே முகாமிடுவதுடன், கடும் கண்டனங்களையும் பதிவு செய்வாா்.

வன்முறையில் கொல்லப்பட்ட இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள். ஆனால், அவா்கள் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மம்தாவும் கண்டு கொள்ளவில்லை. பாதிக்கப்படுபவா்கள் ஹிந்துக்களாக இருந்தால் மம்தா, கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கும்’ என்று பதிலளித்தாா்.

இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப... மேலும் பார்க்க

தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எட... மேலும் பார்க்க

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க