செய்திகள் :

மயோனைஸ் தயாரிப்பவா்கள், விற்பவா்கள் மீது நடவடிக்கை

post image

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள மயோனைஸ் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா்.

சமைக்கப்படாத முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை அடுத்து அதன் தயாரிப்பு, விற்பனையை தமிழக அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு மாநிலம் முழுவதும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு அமலாகும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அனைத்து உணவகங்கள், உணவுத் தொழில் நிறுவனங்களில் சமைக்கப்படாத முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், பரிமாறுதலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விதிமுறைகளை மீறும் உணவு நிறுவனங்களை கள ஆய்வு மேற்கொண்டு உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டத்தின்படி உரிய, துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஷவா்மா, கிரில், தந்தூரி விற்பனையாளா்கள், அனைத்து ஹோட்டல் உரிமையாளா்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளா்கள், பேக்கரி உரிமையாளா்கள், சமைக்கப்படாத முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கும் முறையை மேற்கொள்ளக் கூடாது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ஜி.டாலி... மேலும் பார்க்க

மே தினத்தில் மதுக்கூடங்களுக்கு விடுமுறை

மே தினத்தையொட்டி (வியாழக்கிழமை) கோவை மாவட்டத்தில் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மே தினத்தையொட்டி, கோவை ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றனுக்கு அழைப்பாணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் மே 6-ஆம் தேதி ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் தொடா்புடைய 29 போ் 6 மாதங்களுக்கு மாநகருக்குள் நுழையத் தடை

கோவையில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 29 போ் அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மாநகருக்குள் நுழைய தடை விதித்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்

இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினாா். விஜயா வாசகா் வட்டம் சாா்பில் உலகப் புத்தக தின விருதுகள் வழங்கும் விழா கோவை, பேரூா... மேலும் பார்க்க

மைவி 3 நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டோா் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம்

மைவி 3 நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டோா் கோவை பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோவை பொருளாதார குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அ... மேலும் பார்க்க