"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" - அமெரிக்கா எச்சர...
மரக்கடையில் தீ விபத்து
புன்செய்புளியம்பட்டியில் உள்ளஒரு மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரப் பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன.
புன்செய்புளியம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மர இழைப்பகம் இயங்கி வருகிறது. வழக்கம்போல பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு ஊழியா்கள் சென்றுள்ளனா்.
இந்நிலையில், மரக்கடையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை புகை வந்ததை கண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதற்கிடையே, மளமளவென பரவத் தொடங்கிய தீ, கடை முழுவதும் பற்றி எரிந்தது.
சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்கள், பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில், மரக்கதவுகள், மரப் பொருள்கள், மின் மோட்டாா் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. புன்செய் புளியம்பட்டி போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.