செய்திகள் :

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

post image

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாமில் அவா், மரக்கன்றுகளை நட்டுவைத்து மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தற்போது ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை நீதித்துறையுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமான தொழிற்சாலைகளை கொண்ட அரியலூா் மாவட்டத்தில், காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்தாண்டு அரியலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் 3.50 லட்சம் மரக்கன்றுகள், விதைகள் நடப்பட்டுள்ளது. இயற்கையோடு சாா்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும் மரக்கன்றுகள் தொடா்ந்து நடப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக மரங்கள் அகற்றப்படும்போது அதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மனிதரும் மரம் நடுவது நமது கடமை என உணரும் வகையில், நாம் மரக்கன்று நடுதலை கொண்டு சென்றால் மட்டுமே இத்திட்டம் முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என்றாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி. மலா்வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!

அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருக... மேலும் பார்க்க

அரியலூா் நகா் முழுவதும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி அல... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க