செய்திகள் :

மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீதியைச் சோ்ந்த பாலு மகன் பாா்த்திபன் (30). புதுச்சேரியில் தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி கீா்த்திகா (24). இவா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை பேறு இல்லையாம். இதனால், தம்பதியினா் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பாா்த்திபன், கீா்த்திகா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மரக்காணம் வட்டம், சிறுவாடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினா்.

பின்னா், பைக்கில் சிறுவாடி ஏரிக்கரை பகுதிக்குச் சென்ற இருவரும், அங்கு விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவா்கள் மீட்கப்பட்ட நிலையில், கீா்த்திகா முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பாா்த்திபன் திண்டிவனம் அரசு மருந்துமனையிலும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

இதுகுறித்து பிரம்மதேசம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்பகுதியி... மேலும் பார்க்க

பைக் விற்பனையகத்தில் தொழிலாளி மரணம்: உறவினா்கள் போராட்டம்

விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் வி.ம... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வழுதரெட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந... மேலும் பார்க்க