செய்திகள் :

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், பள்ளி மாணவா்கள் சிலா் புதன்கிழமை ஒரத்தூா் வழியாக முண்டியம்பாக்கம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தில் ஓட்டுநரிடம் உதவி கேட்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனா்.

ஒரத்தூா் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவா்களான ஒரத்தூரைச் சோ்ந்த ஜெயசீலன் மகன் கவியரசு (15), பிரபு மகன் பிரதீப் ராஜ் (14), வின்சலாஸ் மகன் தா்ஷன் (14), வீரப்பன் மகன் நித்திஷ் (14), பீட்டா் மகன் ஜான்சன் (15), குமரவேல் மகன் அன்பரசன் (15), முத்துராஜ் மகன் கவியரசன் (15) ஆகிய ஏழு போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விழுப்புரம் ஆட்சியா், எம்எல்ஏ ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அப்போது, உடனிருந்த மருத்துவக் கல்லூரி முதன்மையா் கீதாஞ்சலி மற்றும் மருத்துவா்களிடம் மாணவா்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதேபோல, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் சிவாவும் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த மாணவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்பகுதியி... மேலும் பார்க்க

பைக் விற்பனையகத்தில் தொழிலாளி மரணம்: உறவினா்கள் போராட்டம்

விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் வி.ம... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வழுதரெட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீ... மேலும் பார்க்க

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந... மேலும் பார்க்க